Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகன ... பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முருகன் கோவிலில் இருந்து சீர்வரிசை பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை நதியின் அதிசய சக்தி: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!
எழுத்தின் அளவு:
கங்கை நதியின் அதிசய சக்தி: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
03:02

புதுடில்லி: கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறினார்.


கங்கை, இந்தியாவின் மிக புனித நதிகளில் ஒன்றாகும், இது கலாசார, ஆன்மிக மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கங்கையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதன் தன்னைத் தானே சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. மஹாகும்பத்தின் போது 60 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிய இருந்தபோதிலும், கங்கை முற்றிலும் கிருமிகள் இல்லாமல் உள்ளது. புற்றுநோய், மரபணு குறியீடு, செல் உயிரியல் மற்றும் ஆட்டோபேஜி ஆகியவற்றில் உலகளாவிய ஆராய்ச்சியாளரான டாக்டர் அஜய் சோன்கர், வாகனிங்கன் பல்கலை, ரைஸ் பல்கலை, டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி போன்ற முன்னணி நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியவர்.  அவர் கங்கை நதி குறித்து ஆய்வு செய்துள்ளார்.


இது குறித்து நீரியல் நிபுணர் டாக்டர் அஜய் சோன்கர் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) இருக்கின்றன. அவை, இயற்கையாகவே மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளைக் கொன்று, அவற்றின் ஆர்.என்.ஏ.,வை மாற்றுவதன் மூலம் தண்ணீரை சுத்திகரிக்கின்றன. இவை வேறு எந்த ஒரு நன்னீர் நதிக்கும் இல்லாத சிறப்பாகும். கங்கையின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் இந்த பாக்டீரியா கொல்லிகள் உடனுக்குடன் நதியை சுத்திகரிக்கின்றன. பாக்டீரியா கொல்லிகளின் சிறப்பு என்னவென்றால், அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கின்றன. அவற்றின் செயல்முறை, கடல் நீரை சுத்திகரிக்கும் கடல் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது தான் கங்கை நதியின் துாய்மைக்கு காரணம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கை நதியில் காணப்படும் பாக்டீரியா கொல்லிகளின் திறன், நதி நீர் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி  ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும், திரியோதசி திதியில் மாலை சூரிய ... மேலும்
 
temple news
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திரரின் ஜயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar