பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.21 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 147, வெளிநாட்டு கரன்சி 817, எண்ணங்கள், தங்கம் 198 கிராம் வெள்ளி 7.181 கிலோ கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.