Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவடிக்குப்பம் குரு சித்தானந்த ... வடபழனி ஆண்டவர் கோயிலில் விடிய விடிய நடந்த மகா சிவராத்திரி வழிபாடு வடபழனி ஆண்டவர் கோயிலில் விடிய விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
01:02

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில் கொதிக்கும் நெய்யில் 92 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பங்கள் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


இக்கோயிலில் மகா சிவராத்திரி அன்று இரவு கொதிக்கும் நெயில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன்படி சிவராத்திரி நாளான நேற்று இரவு 11.50 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டி முத்தம்மாள் அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து தன் நெற்றியிலும், கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் திருநீருடன் கலந்து பூசினார். பின்னர் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பெட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் உடனிருந்தனர். பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, சென்னை, பெங்களூர், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்நிகழ்ச்சியில் 52 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடுவது பக்தர்களை பரவசப்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; நாவா முகுந்தர் கோவிலில் மாசி மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடந்து வந்த மகா கும்பமேளா நிறைவடைந்தது; மொத்தம், 44 நாட்களில் சுமார் 65 கோடி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஈஷா யோகா மையத்தில், ‘ஈசனுடன் ஓர் இரவு’ மஹா சிவராத்திரி நிகழ்ச்சியை, மத்திய உள்துறை அமைச்சர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar