தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீராகுமா ராஜராஜ சோழன் கால ‘சாளவம்’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 11:03
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில் மழைநீர் தேங்காதவாறு, ‘சாளவம்’ என்ற மழைநீர் வடியும் கட்டமைப்பு மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பு முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் வந்து செல்லும் பெரிய கோவிலில், இப்படி தேங்கியுள்ள மழைநீரை முறம், பிளாஸ்டிக் டப்பா ஆகியவற்றை பயன்படுத்தி, கோவில் ஊழியர்கள் அகற்றியதை பார்த்த சுற்றுலா பயணியர் முகம் சுளித்தனர்.