பதிவு செய்த நாள்
04
மார்
2025
11:03
தூத்துக்குடி; அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதி கடற்கரையில் சூரிய உதயத்தை வழிபட பக்தர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், அய்யா வைகுண்டரின் அவதார தின விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 193-வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3மணி முதல் அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பனிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெல்லை,தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் அய்யா சிவ சிவ சிவ சிவ.. ஹர ஹர ஹர ஹர என்ற கோசத்துடன் சூரிய உதயத்தை அய்யா வைகுண்டர் அவரித்ததாக கருதி மலர்கள் தூவி வரவேற்று வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோவில் நடைதிறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அய்யா அவதார தினவிழா முன்னிட்டு தூத்துக்குடி,நெல்லை, குமரி தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.