Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா சித்தலுார் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
எழுத்தின் அளவு:
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 மார்
2025
11:03

பெரம்பலுார்; பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி சுவாமி தரிசனம் செய்து அம்மனுக்கு பத்து சவரன் காசு மாலை மற்றும் பட்டுப்புடவை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.


புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி நேற்று மதியம் ஒரு மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக, பத்து சவரன் காசு மாலை மற்றும் பட்டுப்புடவை சாத்தினார். இதைத்தொடர்ந்து, மகா தீபாரதனை தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் உற்சவரை வணங்கினார். இதனை அடுத்து கோவில் பிரகாரத்தை வளம் வந்து அவர் கோவில் மண்டபத்தில் அமர்ந்தும், உள்பிரகாரத்தில் நின்றவாறும் தியானத்தில் ஈடுபட்டார். தரிசனம் முடிந்த பிறகு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அடிக்கடி மதுர காளியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வர முடியவில்லை. இன்று வர வேண்டும் என்று நினைத்தேன் வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன். அம்பாளை பற்றி எனக்கு தெரியும் அவள் சக்தி என்ன என்று தெரியும் கண்டிப்பாக வேண்டுதலை நிறைவேற்றுவாள். 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வெற்றி வாய்ப்புக்காக அம்மனை வேண்டுதல் செய்தீர்களா என்று கேட்டபோது புன்னகத்தவாறு பதில் அளிக்காமல் சென்று விட்டார் அவருடன் அவரது கட்சி முக்கிய நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar