காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2025 02:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் முக்கிய திருவிழாவான பால்குட விழாவை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மார்ச் 11 கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை இரவு அம்மன் திருவீதி உலாவும் 21ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.