Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் அருகே கோவிலில் 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் அருகே கோவிலில் 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2025
04:03

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே பழமையான கோவிலில், 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்துவரும் நிலையில், சிதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், நாராயணமூர்த்தி தலைமையில் பேராசிரியர் வேல்முருகன், ஆய்வு மாணவர் பிரபு, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், கி.பி.16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ மகாராயரின் 8 ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து பார்க்கும்போது, ஆங்கில ஆண்டு 1517 ல் பிப்ரவரி மாதம் பொறிக்கப்பட்டுள்ளது.


அதில், சந்திர நயினார் என்பவர், கோவிலில் உள்ள செங்கழுநீர் செல்லப் பிள்ளையாருக்கு நாள் படையலுக்காக இவ்வூரில் உள்ள 500 குழி நிலத்தை அவிப்புறமாக வழங்கியது தெரிகிறது. அவிப்புறம் என்பது இறைவனுக்கு தினந்தோறும் நைவேத்யம் எனும் நாள்படையலுக்கு ஆகும் செலவை ஈடு செய்ய விடப்பட்ட நிலக் கொடையாகும். சோழர்களின் ஆட்சி முடிவுற்று 2 நுாற்றாண்டுகள் கடந்த நிலையில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் விஜயநகர நாயக்கர் ஆட்சியிலும் கூட சோழர்கால நாட்டு பிரிவுகள் தொடர்ந்திருப்பதை அறிய முடிகிறது. இதனால் மறைந்து போன சோழர் ஆட்சி முறையில் சிறப்பையும் உணர்த்துவதாக கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜரை கோயில் ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவிலில் திருகல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன்  கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar