Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர திருவிழா, சித்திரை ... ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2025
10:04

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும், 4ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த ஜனவரி மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த, மார்ச் 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, 9:30 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம் நடந்தது. தொடர்ந்து, கன்னிமார் கோவில் பின்புறம் உள்ள சுனை தீர்த்தக்கிணற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின், சிறப்பு பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர், பாலாலயம் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான சுப்பிரமணியசுவாமி, ஆதி மூலவர் கலாகரிஷனம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் ஹோமம் செய்யப்பட்டு, முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது. இதில், பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், பண்ணிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். இரவு, 10:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடைந்து. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 4ம் தேதி, காலை, 8:30 மணி முதல் 09:30 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar