Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலக அதிஷ்டமா? ஆபத்தா?: ஒரு ஆய்வு! வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா! வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யர்மலை கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2012
10:12

குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல, கிடப்பில் போடப்பட்ட ரோப்கார் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலை கோவில் 1,117 படிகள் கொண்டது. பிரசித்தி பெற்ற கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டமும், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலமும், கார்த்திகை மாதம் திங்கள்தோறும் சோமவாரம் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் சிறப்பு தரிசனம் நடந்து வருகிறது. அய்யர்மலை மலைக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, கோவிலுக்கு ரோப்கார் வசதியை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பக்தர்கள் பங்களிப்பு தொகையாக, இரண்டு கோடியே, 40 லட்சம் ரூபாய் குளித்தலை கே.வி.பி., வங்கியில் வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டது. பிறகு, கடந்த, 2011 ஃபிப்ரவரி, 2ம் தேதி, அய்யர் மலைக்கு ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிறகு, 2011ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., பொறுப்பேற்றது. இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அய்யர்மலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, "கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் ஆகியோர், அய்யர் மலையில் ரோப்கார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்.1., இல் திண்டுக்கல் போலீசார் சார்பில் பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar