பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
12:04
செஞ்சி; களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
செஞ்சி அடுத்த களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து ஜீர்னோதாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 15ம் தேதி காலை 8 மணிக்கு கோபூஜை, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நக்கிரக ஹோமமும், மாலை 4 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், முதற்கால ஹோமம், இரவு 9 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், வேதிகார்ச்சனையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மகாதீபாராதனை நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.