பதிவு செய்த நாள்
18
ஏப்
2025
05:04
உடுமலை; உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
உடுமலை ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், இன்று காலை உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக, ருத்ரம், விஷ்ணு சஹஸ்கர நாம பாராயணம், லட்சார்ச்சனை, லலிதா சஹஸ்ர நாமம், லட்சுமி அஷ்டோத்திரம் செய்து, பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடுமலை பிராமண சேவா சமிதி தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஹரி, துணைச்செயலாளர் சேகர் மற்றும் பொருளாளர் வெங்கட் செய்திருந்தனர்.