நத்தம்; நத்தம் அருகே குட்டூரில் அண்ணாமலையார் கோவிலில் நடராஜர் சன்னதியில் சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு செண்பகபூ, தாமரை வில்வ மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால்,பழம், இளநீர், திருமஞ்சனம், தேன், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.