Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை பாதாள காளியம்மன் கோவில் ... கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபளீகரம் ஆகும் சிவன் கோவில் சொத்து; போலி பட்டாவை ரத்து செய்யாமல் இழுத்தடிப்பு
எழுத்தின் அளவு:
கபளீகரம் ஆகும் சிவன் கோவில் சொத்து; போலி பட்டாவை ரத்து செய்யாமல் இழுத்தடிப்பு

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
10:04

திருவள்ளூர்; பஞ்ச பாஸ்கர ஸ்தலங்கள் ஐந்தில், சென்னை செங்குன்றம் அருகே திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் முதலாவதாக உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவில்,  1,000 ஆண்டு பழமையானது. கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் காலப்போக்கில் சுருங்கி விட்டது. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது.


சமீபத்தில் கோவிலுக்க சொந்தமான 31 சென்ட் நிலத்தை சிலர் போலி பட்டா தயாரித்து அதை வேறு ஒருவருக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த இந்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.நாகபூஷணம், கோவில் நிர்வாகத்திற்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார் அளித்தார். அதன்படி, புகாரில் குறிப்பிட்ட இடம், கோவிலுக்கு சொந்தமானது என கடந்தாண்டு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், பொன்னேரி தாசில்தார் ஆகியோர் தணிக்கை செய்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், ‘‘போலி பட்டா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,’’ என நாகபூஷணம் கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது: பஞ்ச பாஸ்கர ஸ்தலமான இக்கோவிலில் மட்டுமே திருவோடு மரம் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல ஏக்கர் நிலம், ஏற்கனவே பறிபோயுள்ளது. தற்போது கோவில் எதிரே உள்ள 31 சென்ட் இடம் போலி பட்டா மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தும். அதன் மீது, ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இவ்விஷயத்தில் திருவள்ளுர் மாவட்ட கலெக்டரும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் போர்கால அடிப்படையில் செயல்பட்டு கோவில் இடங்களை மீட்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவில் கோபுரம் முன் தோண்டிய போது, புதையல் கிடைத்தது. அதைப்பற்றி வெளியே யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்துவிட்டனர். அதுகுறித்தும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மெத்தனமாக செயல்படுவதே கோவில் சொத்து கபளீகரம் ஆவதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar