Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் ரோப்கார் சேவை ... உலகம் அழியப் போவதாக வதந்தி: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு! உலகம் அழியப் போவதாக வதந்தி: பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 டிச
2012
10:12

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. விழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் முன் தகரக்கொட்டகை அமைத்தது, திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும், திரு அத்யயன உற்சவம் எனப்படும், வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று துவங்கி, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது. பகல்பத்து நாட்களில், திருமொழி பாசுரம், ராப்பத்தில், திருவாய்மொழி பாசுரங்கள், அபிநயங்கள், வியாக்னத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும்.

சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான, திருநெடுந்தாண்டகம், இன்றும், பகல்பத்து நாளையும், மோகினி அலங்காரம், வரும், 23ம் தேதியும், சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு, 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கும் நடக்கிறது. அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை, சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திடீர் சர்ச்சை: திருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறும் என்பது ஐதீகம். ஆனால், "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்பதால், நம்பெருமாள் எழுந்தருளக்கூடிய, ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, ஆயிரங்கால் மண்டபத்திற்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களை ஊன்றி, புதிய தென்னங்கீற்றுகளை கொண்டு, பிரம்மாண்ட பந்தல் அமைப்பது வழக்கம்."பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், விழாமுடிந்த பிறகு, மரங்களும், கீற்றுகளும் அகற்றப்படும். ஆனால், தற்போது, 40 தென்னை மரங்கள் ஊன்றப்பட்ட நிலையில், கீற்றுகளுக்கு பதிலாக, தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் ஒழுகு என்று உடையவரால் முழுமையாக ஒழுங்கமைப்பட்ட நடைமுறைகளே, ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, இந்து சமய அறநிலையத்துறையினர் செயல்படுவது கண்டித்தக்கது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.இதுகுறித்து கோவில் நிர்வாக வட்டாரத்தில் விசாரித்தபோது, "கோவில் நடைமுறைகளை மீறுவது எங்களது நோக்கமல்ல. கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, எளிதில் தீ பிடிக்காத வகையில், தகரக்கொட்டகை அமைக்கப்படுகிறது என்கின்றனர்.

உயரதிகாரி கைங்கர்யம்: செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசுச் செயலாளராக ராஜாராம் உள்ளார். தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளர் என, அவருடன் பணியாற்றும் அதிகாரிகளால் வர்ணிக்கப்படுபவர். இவரின், தன்னிச்சையான செயல்பாடுகளால், பல்வேறு கோவில்களை சேர்ந்த, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நித்ய அன்னதான திட்டம் முழுமையாக செயல்படாதது, வைகுண்ட ஏகாதசி விழாவில், கீற்றுக்கொட்டகைக்கு பதில் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டது, வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இவர் தான் காரணம் என, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வாய்மொழி உத்தரவுப்படியே, அனைத்தும் நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் மூன்று துறைகளை, அவர் தன் வசம் வைத்துள்ளதால், எந்த துறையிலும் முழுகவனம் செலுத்தாமல் உள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar