Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க குதிரை வாகனத்தில் கொட்டகுடி ... ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில்  திருக்கல்யாணம் கோலாகலம் ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி அகத்தீஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு மகா யாகம்
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி அகத்தீஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு மகா யாகம்

பதிவு செய்த நாள்

12 மே
2025
02:05

காரைக்கால்; உலக நன்மை வேண்டி பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியையொட்டி, குரு பகவானுக்கு மகா யாகம் நடந்தது.


திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். விசேஷமாக ரிஷப வாகனத்தில் அமர்ந்த காலத்தில் பன்னிரண்டு ராசி சக்கரங்களோடு மேலே விநாயகர் வலது புறத்தில் அகஸ்தியர் இடதுபுறத்தில் கோரக்கர் சித்தர் ஆகியோரோடு ராசி மண்டல குரு தட்சிணாமூர்த்தியாக தெற்கு முகம் நோக்கி அருள் பாலித்து வருகிறார். குருபெயர்ச்சியையொட்டி, இக்கோயிலில், உலக நன்மை வேண்டி நேற்று மகா யாகம் நடந்தது. ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியானதையடுத்து, 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரார்த்தனை நடந்தது. மழை வேண்டிய மகா சங்கல்பத்துடன் ஜபம் நடைபெற்றது. பின் மகா பூர்ணாஹுதி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, 27வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அகில இந்திய ஆசிசைவ சிவாச்சாரியர் சேவா சங்க துணைத் தலைவர் சர்வ சாதகம் திருநள்ளாறு ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் குருக்கள்கள் பிரம்மஸ்ரீ ராஜா குருக்கள். பிரம்மஸ்ரீ குமார் குருக்கள்.ஆச்சார்ய சாதகமாக சிவராம மூர்த்தி சிவாச்சாரியார் சக்தி மணிகண்ட சிவாச்சாரியார் ஆகியோர் யாகம் நடத்தினர். 108 வகையான மூலிகைப் பொருட்கள், நவதானியங்களை கொண்டு இந்த மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக மங்கள வாத்தியத்துடன் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து குரு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar