Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் ... கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து கருப்பர் கோவிலில் திருக்கல்யாணம் கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக அமைதிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக அமைதிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 மே
2025
12:05

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கும், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கும், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து, உலக நாடுகளில் பயங்கரவாத செயல்களின்றி, மக்கள் அமைதியுடன் வாழவும், இயற்கை சீற்றம் தணியவும், 1,008 யாக குண்டங்கள் அமைத்து, மஹா வேள்வி பூஜை நடந்தது. இதை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சரியார் வழங்கிய பிரசாதத்தை, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரிடம், சங்கரா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வழங்கினார். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாக குண்டங்கள் மற்றும் வேள்வி பூஜை பொறுப்பை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச் செயலர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன் மற்றும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின், ஆதிபராசக்தி மன்ற சக்திபீட நிர்வாகிகள் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமி விழாவை, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் முதலில் துவக்கிய போது, மழை பெய்தது. அதன் பின், நேற்று நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில், மழை பெய்தபோது, பக்தர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar