அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்; மயில்வாகனத்தில் சுப்ரமணியர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2025 10:05
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் கோவில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது. அதில் நாரசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.