Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்துார் முருகன் கோவிலில் ... பரமக்குடி அருகே பெருங்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் பரமக்குடி அருகே பெருங்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப் காரில் ஒத்திகை
எழுத்தின் அளவு:
பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப் காரில் ஒத்திகை

பதிவு செய்த நாள்

24 மே
2025
10:05

பழநி; பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப்காரில் ஆபத்து நேரத்தில் பக்தர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகை நடத்தினர்.


பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, அரக்கோணம் பகுதியில் இருந்து வருகை புரிந்தனர். துணை கமாண்டண்ட் சுதாகர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் பழநி கோயில் ரோப் கார் நிலையத்திற்கு பேரிடர் மீட்பு, போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வருகை புரிந்தனர். கோயில் சார்பில் பராமரிப்பு நேரமான மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் சென்றுவர இடையூறு ஏற்படவில்லை. ரோப் கார் பெட்டிகளில் பணியாளர்கள் இரண்டு நபர்களை அமர்த்தி பாதி வழியில் அந்தரத்தில் நிறுத்தினர். அதன் பின் பேரிடர் ஒத்திகை துவங்கியது. திண்டுக்கல் உதவி மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மீட்பு படையினர் ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் அந்தரத்தில் ரோப்கார் பெட்டியில் சிக்கி இருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இதில் நவீன உபகரணங்களை பயன்படுத்தினர். மேலும் தொலைத் தொடர்பு வசதியை தனியாக ஏற்படுத்த சாட்டிலைட் தொடர்பு கொள்ளும் வகையில் ஆண்டனா அமைக்கப்பட்டு வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதில் உதவி கலெக்டர் சுகுமார், தாசில்தார் பிரசன்னா, கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் உமாசெல்வி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காளிதாஸ், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar