பதிவு செய்த நாள்
24
மே
2025
10:05
செம்பாக்கம்; சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 5:30 மணிக்கு விநாயகர் பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தெய்வ விக்ரஹங்களுக்கு காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.