பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
11:06
மேட்டுப்பாளையம்; மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து, வீடு வீடாக அழைப்பிதழ் வழங்குவதற்கு முன்பாக, பா.ஜ., சார்பில் மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவிலில் வேல் பூஜை நடந்தது.
மதுரையில் ஜூன் மாதம் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மேட்டுப்பாளையம் பொதுமக்களுக்கு பா.ஜ., சார்பில் வீடு வீடாக அழைப்பு கொடுக்கும் பணியானது துவங்கியது. முன்னதாக மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பா.ஜ.,வினர் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கினர். வேல் பூஜை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் பா.ஜ., நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், அழைப்பிதழ்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் நகர் தலைவர் உமாசங்கர், மகளிர் அணியினர், நகர நிர்வாகிகள், மாநில அமைப்புசாரா நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.