பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
11:06
வால்பாறை; முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாத சஷ்டி பூஜையான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன் பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை மகிழ்வித்தனர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சஷ்டி பூஜையான நேற்று சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.