பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயிலில் மது கரகம் எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2025 12:06
தேவகோட்டை; தேவகோட்டை அருகே பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயில் முளைப்பாரி மது கரகம் எடுப்பு விழா நடைபெற்றது. அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஆண்களும் பெண்களும் முளைப்பாரி, மதுக்கரகம் எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.