பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
12:06
காரைக்கால்; காரைக்காலில் கயிலாசநாத சுவாமி திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் ஸ்ரீசுந்தராம்பாள் உடனுறையும் ஸ்ரீ கயிலாசநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 7.30மணி முதல் 8.45வரை வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29ம் தேதி கணபதிஹோமத்துடன் துவக்கியது. கடந்த 2ம் தேதி யாகசாலை பிரவேசம் முதல்கால யாகம் சாலை தொடங்கியது. இன்று ஆறாம் கால யாகம் சாலை முடிவடைந்து பின்னர் யாகசாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்களுடன் ராஜகோபுரம், சிவன், அம்பாள், முருகன், விநாயகர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு விமானங்களுக்கு 46 கலசங்கள் கொண்டு மகா கும்பாபிரேஷகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ., க்கள் நாஜிம், சந்திரபிரியங்கா, நாகதியாகராஜன், கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், டி.ஜ.ஜி., சத்திய சுந்தரம், என்.ஆர்., கட்சி பிரமுகர் ரவிச்சந்திரன்,தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக சீனியர் எஸ்.பி.,லட்சுமி சௌஜன்யா தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.