Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கயிலாசநாத சுவாமி ... கிணத்துக்கடவு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கிணத்துக்கடவு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சலோக சிலைகள்
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சலோக சிலைகள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2025
12:06

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை ஆனந்தவல்லி தாயாருடன் சந்திரசேகரரும், ஸ்ரீ தேவி பூதேவியுடன் வீரராகவப்பெருமாளும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.


மதியம், சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாலையில், சோமாஸ்கந்தர் பூத வாகனத்திலும், விசாலாட்சியம்மன் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளினர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வாக, 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது. கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகள், ஸ்ரீகருட வாகன புறப்பாடு நடந்து வருகிறது. இதுவரை, பேரூர், பவானி பகுதிகளில் இருந்து, 63 நாயன்மார் உற்சவ திருமேனிகள் எடுத்துவந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது, கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார் பஞ்சலோக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளை, குலாலர் பிள்ளையார் கோவிலில், 63 நாயன்மார் சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 7ம் தேதி காலை, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், மாலையில் அலங்காரபூஜையும் நடக்கிறது. அப்போது, குலாலர் பிள்ளையார் கோவிலில் இருந்து, 63 நாயன்மார்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டை தொடர்ந்து, 8ம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 9ம் தேதி காலை, உற்சவமூர்த்திகள் ரதோற்சவமும், மாலையில் சோமாஸ்கந்தர் தேரோட்டமும், 10ம் தேதி மாலை, ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்.1., இல் திண்டுக்கல் போலீசார் சார்பில் பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar