Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கயிலாசநாத சுவாமி ... கிணத்துக்கடவு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கிணத்துக்கடவு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சலோக சிலைகள்
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சலோக சிலைகள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2025
12:06

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை ஆனந்தவல்லி தாயாருடன் சந்திரசேகரரும், ஸ்ரீ தேவி பூதேவியுடன் வீரராகவப்பெருமாளும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.


மதியம், சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாலையில், சோமாஸ்கந்தர் பூத வாகனத்திலும், விசாலாட்சியம்மன் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளினர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வாக, 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது. கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகள், ஸ்ரீகருட வாகன புறப்பாடு நடந்து வருகிறது. இதுவரை, பேரூர், பவானி பகுதிகளில் இருந்து, 63 நாயன்மார் உற்சவ திருமேனிகள் எடுத்துவந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது, கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார் பஞ்சலோக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளை, குலாலர் பிள்ளையார் கோவிலில், 63 நாயன்மார் சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 7ம் தேதி காலை, பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், மாலையில் அலங்காரபூஜையும் நடக்கிறது. அப்போது, குலாலர் பிள்ளையார் கோவிலில் இருந்து, 63 நாயன்மார்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டை தொடர்ந்து, 8ம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 9ம் தேதி காலை, உற்சவமூர்த்திகள் ரதோற்சவமும், மாலையில் சோமாஸ்கந்தர் தேரோட்டமும், 10ம் தேதி மாலை, ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar