பதிவு செய்த நாள்
05
ஜூன்
2025
12:06
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் மந்தை மாரியம்மன், அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் மந்தை மாரியம்மன், அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 20ம் தேதி, நோன்பு சாட்டுதல் மற்றும் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. கடந்த, 2ம் தேதி, காலையில் காப்பு கட்டுதல், கம்பம் எடுத்து வந்து கங்கையில் வைக்கப்பட்டது. இரவு, கம்பம் நடுதல் மற்றும் கோவில் பூவோடு எடுக்கப்பட்டது. 3ம் தேதி, ஆபரண பெட்டி மற்றும் பால்குடம் எடுத்து வருதல், பூவோடு எடுத்தல், சக்தி கும்பம் அழைத்தல் நடந்தது. நேற்று, 4ம் தேதி, மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கம்பம் எடுக்கும் நிகழ்வு நடந்தது.இன்று, 5ம் தேதி, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. நாளை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.