பழநி கோயில் கிழக்கு வெளிப்பிரகாரத்தில் ஓம் முருகா மின்விளக்கு அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2025 12:06
பழநி; பழநி கோயிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தில் அமைந்துள்ளது போல் ஓம் முருகா நீயான் மின் விளக்கு கிழக்கு வெளிப்பிரகாரத்தில் பொருத்தப்பட உள்ளது
பழநி கோயிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய ஓம் முருகா எனும் எழுத்துக்களைக் கொண்ட நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு வடக்கு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு,கோயமுத்தூர் பகுதிகளிலிருந்து வரும் வெளியூர் நபர்களுக்கு இரவு நேரத்தில் மலை மீது தெரியும். வடக்கு வெளி பிரகாரத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் இந்த மின் விளக்கை ரசித்து செல்வர். தற்போது கோயில் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இதே போன்ற பெரிய ஓம் முருகா எழுத்துக்களை உடைய நியான் மின்விளக்கு கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தில் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தே ஓம் முருகா எனும் மின்விளக்கு ஒளியை மலை மீது கண்டு ரசிக்கலாம். மேலும் அடிவாரம் கிரிவீதியில் பாத விநாயகர் கோயில் அருகே 20 அடிக்கு அகலம் 10 அடி உயரம் உள்ள எல்.இ.டி, டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு வருகிறது இதில் கோயில் நிகழ்வுகள், தகவல்கள் இந்த டிஜிட்டல் தகவல் பலகை மூலம் பதிவிடப்படும். இதனால் பக்தர்கள் எளிதில் விவரங்களை பெறலாம்.