Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி ... திருமலை திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் துவக்கம்; ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் திருமலை திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
11:06

நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழாவில் நடந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நத்தம், கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலின் வைகாசி திருபூப்பல்லாக்கு, 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று முன்தினம் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலையில் 8.50 மணிக்கு சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் திருத்தேர் வர்ண பூமாலைகளாலும், வண்ண துணிகளாலும் அலங்கரிங்கபட்டு இருந்தது.இந்த தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகர்வலமாக கோவிலை வந்தடைந்தது. இதில் வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து இன்று பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், மறுநாள் உற்சவ சாந்தி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.முன்னதாக தேரோட்ட விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக பங்கேற்ற,னர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar