நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 11:06
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 31 மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஜூன்.,1ம் தேதி காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 7 மாலை 6:00 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் தங்க ரதத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். ஜூன் 8 மாலை 6:10 மணிக்கு வெள்ளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து இன்று ஜூன் 9ம் தேதி காலை தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:25 மணிக்கு தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. நாளை ஜூன் 10ல் காலை பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். ஜூன் 11ல் ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.