காரைக்காலில் மாங்கனி திருவிழா; பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 04:06
காரைக்கால்; காரைக்காலில் வரும் 10ம் தேதி மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பி அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இந்தாண்டு வரும் ஜூலை 8ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும். 9ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும்,இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும்,மறுநாள் ஜூலை 10ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும். அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் பைபவம் நடக்கிறது.அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. ஒருமாதம் நடைபெறும் திருவிழாவில் பிரதான பாரதியார் சாலையில் பந்தல் அமைந்து இருப்புறம் கடைகள் அமைக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் ஆகியோர் கொண்ட அறங்காவலர் குழுவின் சிறப்பாக செய்து வருகின்றனர்.