பதிவு செய்த நாள்
24
ஜூன்
2025
05:06
சிவகங்கை,; சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை நேருபஜார் சந்திப்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு சக்தி ேஹாமம், கலச பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. இன்று மாலை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷஷக, ஆராதனை நடைபெறும்.
ஜூலை 8 ம் தேதி காலை 8:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பால் அபிேஷகம் நடைபெறும். அன்று இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு பூக்கரகம், அக்னி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடக்கும். இரவு 8:00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நகர்வலம் வருவர். ஜூலை 11 அன்று வீரமாகாளியம்மனுக்கு பூத்தட்டுக்களை ஏந்தி வந்து, பூச்சொரிதல் விழா நடத்துவர். அன்று இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் ரத ஊர்வலம் நடைபெறும். ஜூலை 13 ம் தேதி கோயிலில் திருவிளக்கு பூஜை நடக்கும். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.