பதிவு செய்த நாள்
26
ஜூன்
2025
10:06
நாமக்கல்; ஆனி அமாவாசையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயார் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்றபடி சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்புகள், தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருகின்றனர். அதன்படி, ஆனி அமாவாசையான நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காவிப்பட்டு, வெற்றிலை மாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.