Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயில் உண்டியலில் கிடைத்த ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்; வடைமாலை சாத்தப்பட்டு பூஜை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்: இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்: இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2025
05:06

தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரிய கோவிலின், தெற்கு புறத்தில் வராஹி அம்மன் சன்னதி உள்ளது.  வராஹி அம்மனை போர்களுக்கு செல்லும் போது மாமன்னன் ராஜராஜசோழன் வணங்கிச் சென்றதாக வரலாறு உண்டு. வராஹிக்கு, ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்தாண்டு இன்று (ஜூன் 25) காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. முதல் நாளான இன்று மாலை  இனிப்பு அலங்காரத்துடன் விழா துவங்கியது. 


தொடர்ந்து, நாளை (26-ம் தேதி) மஞ்சள் அலங்காரம்,  27-ம் தேதி குங்குமம், 28-ம் தேதி சந்தனம், 29-ம் தேதி தேங்காய்ப்பூ, 30-ம் தேதி மாதுளை, ஜூலை 1-ம் தேதி நவதானியம், 2-ம் தேதி வெண்ணெய், 3-ம் தேதி கனி வகை, 4-ம் தேதி காய்கறி, 5-ம் தேதி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.  தினமும் காலை 8:00 முதல் 10:00 மணி வரை சிறப்பு வராஹி ஹோமும், 10:00 முதல் 11:00 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பஞ்சமி தினமான 30-ம் தேதி காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு பஞ்சமி குழுவினரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கிறது. 5-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு வராஹி அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மகாளய பட்சம். பித்ருக்களின் ஆசி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar