புத்தேரி வரதராஜ பெருமாள், மகா மாரியம்மனுக்கு அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2025 04:06
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு நேற்று அமாவாசையொட்டி காலை 9:00 மணிக்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.