Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ... இன்று ஆனி உத்திர அபிஷேகம், குமார சஷ்டி; முருகன், நடராஜர் அபிஷேகம் தரிசிப்போம்.. துன்பம் இல்லா வாழ்வு பெறுவோம்! இன்று ஆனி உத்திர அபிஷேகம், குமார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2025
10:07

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக சிதம்பரம் விளங்குகிறது சிதம்பரம் நடராஜப் பெருமாளுக்கு வருடத்தில் ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மகாபிஷேகம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9ம் நாள் விழாவான தேர் திருவிழா இன்று ஜூலை 1ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்று சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. சுவாமி சித்சபை ரதயாத்திராதானம் நிகழ்ச்சியைதொடர்ந்து தேவாரம் திருவாசகம் பாட, மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் சுவாமி புறப்பாடு செய்து,  தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளினார். தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடக்கப் பெற்று, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முதல் தேராக விநாயகர், முருகர் தேரை தொடர்ந்து நடராஜர் சுவாமி, சிவகமாசுந்தரி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு வீதிகளில் மண்டகப்படிதாரர்கள் வீட்டின் முன்பு நின்று சிறப்பு தீபாராதனைகளுடன் தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளில் தேர் வலம் வந்தது. 

பின்பு மதியம் 2 மணி அளவில் தெற்கு சன்னதியும் கீழ சன்னதியில் சந்திக்கும் இடத்தில் நடராஜா பெருமானின் தேரை நிறுத்தி விடுவார்கள். மாலை 4 மணிக்கு மேல் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடராஜ பெருமான் எங்களது மாப்பிள்ளை என்று சன சீர்வரிசையுடன் வந்து நடராஜர் பெருமானுக்கு படைத்த உடன் தான் அங்கிருந்து தேர் கிளம்பி மாலை 6 மணி அளவில் கீழ வீதியில் வந்து சேரும் பின்பு ஒன்பது மணி அளவில் சுவாமியும் அம்பாளும் நடனம் ஆடியப்படியே தேரிலிருந்து இறங்கி பொதுமக்களுக்கு காட்சி கொடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜபெருமானும் சிவகாமசுந்தரிக்கு இரவு முழுவதும் மகா அபிஷேகங்கள் நடைபெறும். மறுநாள் நாளை (2ம் தேதி)மதியம் 2 மணி அளவில் ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar