Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கோட்டையில் 63 தவில், நாதஸ்வர ... காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ; நாளை மாங்கனி திருவிழா காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம் நடத்தி ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
எழுத்தின் அளவு:
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம் நடத்தி ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2025
11:07

சென்னை; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில், காஞ்சி மடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், மூன்று கோவில்களின் கும்பாபிஷேகங்களை நடத்தி, பக்தர்களை ஆசிர்வதித்தனர்.


காஞ்சி சங்கரமடத்தின்மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அக்ரஹாரத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வி கற்றதும், தந்தையிடம் வேதம் பயிலத் தொடங்கியதும் தண்டலம் கிராமத்தில்தான். அதனால், இரண்டு கிராமங்களும் சுவாமிகளுக்கு சொந்த ஊர் போலத்தான். காஞ்சி மடாதிபதி, தன் தாய் மண்ணான ஆரணிக்கு நேற்று முன்தினம்விஜயம் செய்தார். அவர் பிறந்த இல்லத்தில், காஞ்சி மடத்தின் ஆரணி கிளை அமைந்துள்ளது. அந்த இல்ல முகப்பில் உள்ள ஆதிசங்கரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. குருவின் உத்தரவை ஏற்று, 7௧வது மடாதிபதிசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கும்பாபிஷகத்தை நடத்தி வைத்தார். அடுத்து, தண்டலத்தில்உள்ள பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தையும், காஞ்சி மடாதிபதிகள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காமாட்சி அம்மன் சமேத தரணீஸ்வரர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையும் மடாதிபதிகள் நடத்தி வைத்தனர். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு வழங்கிய அருளாசியில், ‘‘ஒருவரின் தாய் எவ்வளவு சிறந்தவரோ, அதேபோல் அவரது தாய்நாடும் போற்றுதலுக்குரியது. தவத்தின் மூலம் கிடைக்கும் சொர்க்கத்தைவிட, தாய் மற்றும் தாய்நாடு மேன்மையானது,’’ என்றார். தண்டலம் கிராமத்தில், காஞ்சி மடம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar