Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கோயில் ஆழ்வார் ... ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2025
12:07

மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு, 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா வருகிற, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ல் கிராம சாந்தியும், 27ல் கொடியேற்றமும், 28ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நடைபெற உள்ளது. 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 


30ம் தேதி மாவிளக்கும், பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி பரிவேட்டை வானவேடிக்கையும், ஆகஸ்ட் 1ம் தேதி மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் சிறப்பு பூஜை இன்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டத்தை சுற்றி, பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர். அதன் பின்பு கோவில் பூசாரி, சிறப்பு பூஜை செய்து, குண்டம் கண் திறந்தார். இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar