Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் ஐயப்ப சுவாமி ...  திருச்சூர் வடக்குநாகர் கோவிலில் யானையோடு விழா கோலாகலம் திருச்சூர் வடக்குநாகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் சேரும் குப்பையில் இருந்து பயோ கேஸ்; பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருமலையில் சேரும் குப்பையில் இருந்து பயோ கேஸ்; பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2025
04:07

திருமலை; திருமலை குப்பை சேகரிப்பு  தளத்திற்கு அருகில் ரூ. 12.05 கோடி செலவில் பயோகேஸ் பிளாண்ட் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் உருவாகும் 55 டன் ஈரக் கழிவுகளில் இருந்து சுமார் 40 டன் கழிவுகளை ஐஒசிஎல்.,சீர் செய்து அதில் இருந்து தினமும் 1,000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யும் என ஐஒசிஎல் மார்க்கெட்டிங் டைரக்டர்  சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். திருமலை வெளிச்சுற்று சாலையில்  45 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய எல்பிஜி  எரிவாயு சேமிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் தேவஸ்தானத்தின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யப்படும். லட்டு பிரசாதம் தயாரிப்புக்கும், இலவச உணவுக்கான சமையலுக்கும் பயன்படும் கூடுதல் கேஸ் பயன்படுத்தப்படும்.இதன் மூலம் வருடத்திற்கு சுமார் ரூ. 1.50 கோடி சேமிப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஒசிஎல் மார்க்கெட்டிங் டைரக்டர்  சதீஷ்குமார் கூறுகையில்; திருமலை குப்பை கொட்டும் இடத்தில் ஏற்கனவே 12.05 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினமும் பெறப்படும் 55 டன் ஈரக் கழிவுகளில் 40 டன் ஐஓசிஎல் ஆலைக்கு மாற்றப்படும் என்றும், ஒரு நாளைக்கு 1000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆலையில் 45 மெட்ரிக் டன் மவுண்டட் சேமிப்பு பாத்திரங்கள், 1500 கிலோ ஆவியாக்கி, தீயை அணைக்கும் அமைப்பு, தெளிப்பான் அமைப்பு, இரண்டு தண்ணீர் தொட்டிகள், டீசல் ஜெனரேட்டர் செட், ரிமோட் ஆப்பரேட்டிங் வால்வுகள், கேஸ் கசிவு அலாரம், டேங்க் லாரி டிகாண்டேஷன் சிஸ்டம், சிசிடிவி, ஜிஎம்எஸ், டிஎஃப்எம்எஸ், ஐஎல்எஸ்டி மற்றும் பிற அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அலுவலர் சத்யநாராயணா, சுப்பிரமணியம், சுதாகர், சந்திரசேகர் மற்றும் பிற தேவஸ்தான மற்றும் ஐஓசிஎல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar