ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 11:07
செஞ்சி; ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி அடுத்த காரை ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 5 நாள் சாகை வார்த்தல் திருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து 108 பெண்கள் ஊர்வலமாக பால்குடங்களை, எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நாளை 3 வது நாள் விழாவாக பூங்கரகம் ஊர்வலமும், சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதி உலாவும் நடக்க உள்ளது. 5ம் நாள் விழாவாக 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.