ஸ்ரீரங்கம் ஆடி பூரம் உற்சவம்; யோக நிலையில் பத்ரி நாராயணன் திருக்கோலத்தில் ஆண்டாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 11:07
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பான ஒன்றாகும். இங்கு நாதமுனிகள் சந்நிதியில் உள்ள ஆண்டாளுக்கு ஆடிமாதம் திரு நட்சத்திரமான பூரம் நாள் அன்று ஆடிப்பூரம் திருவிழாவாக, பத்து நாள்கள் நடைபெறுகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று மூன்றாம் திருநாள் யோக நிலையில் பத்ரி நாராயணன் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். தொடர்ந்து கண்ணிநுன் சிறுதாம்பு சாற்று முறை பெரியதிருமொழி 1-ம் பத்து துவக்கம் 4ம் பத்து சாற்றுமுறை நடைபெற்று, தீர்த்தம், பிரசாத விநியோகம் நடைபெற்றது.