செங்கழனி மாரியம்மன் கோவிலில் 1ம் தேதி செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 11:07
விருத்தாசலம்; பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், செடல் திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 1ம் தேதி, காலை 7:00 மணிக்கு மணிமுக்தா ஆற்றில் இருந்து செடல் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 2ம் தேதி கஞ்சி கலய ஊர்வலம், 3ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.