குற்றாலம் கோயிலில் திருவாதிரை: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2012 11:12
குற்றாலம்: குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. குற்றாலம் குற்றாலநாதர்-குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி நேற்று காலை 5.20மணி அளவில் கொடியேற்றம் நடந்தது. திருவிழா வரும் 28ம்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலாவும், வெள்ளிச் சப்பரத்தில் பவனிவருதலும் நடக்கிறது. 23ம்தேதி காலை கோயிலில் நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி இரவு நடராஜர் வெள்ளைசாத்தியும், 26ம் தேதி பச்சை சாத்தியும் வீதியுலா நடக்கிறது. 28ம்தேதி அதிகாலை 4மணிக்கு சித்திரசபையில் நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும், 5மணிக்கு திரிகூட மண்டபத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.