சிவகிரி: சிவகிரி ஆறுமுகநயினார் கோயிலில் குமாரசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.சிவகிரியில் ஆறுமுகநயினார் கோயில் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குமாரசஷ்டி திருவிழா 6நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு துவங்கி ஒவ்வொருநாளும் இரவு வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆறாம் நாளன்று ஆறுமுகநயினாருக்கு பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உட்பட 18வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். 7ம் மண்டபம் அருகில் சூரனை பாலசுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு சுவாமிக்கு தீபாராதனை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.