Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை ஆடி அமாவாசை; மேட்டுப்பாளையம் ... திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம் திருப்பூர் செல்லாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
பழமையான நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2025
02:07

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் 1,400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. அதேப் போன்று, நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல் வெட்டுகளும் உள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது தெப்பல் உற்சவம் நடக்கும்.


கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதியாகும். இதற்காக திருப்பணிகள் செய்ய 41 லட்சமும், தேர் செய்ய 43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது. இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் புனரமைப்பு பணி முடிந்து பெயிண்டிங் வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் துாண்களில் விரிசல் இருப்பது தெரிந்தது. பழமையான கோவில் என்பதால் தொல்லியியல் துறையில் அனுமதி பெற்றே மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இதற்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால் அந்த பணியை செய்ய முடியவில்லை. தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. கருங்கல் மண்டபத்தை முழுமையாக பிரித்து விட்டு சரி செய்வதா அல்லது ஜாக்கி மூலம் துாக்கி விரிசல் விழுந்த துாண்களை மட்டும் மாற்றுவதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால் மகா மண்டபம் பணிகளை துவக்காமல் உள்ளனர். அந்த பணியை முடித்தால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும். கோவிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் இருந்தும் திருப்பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar