Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.36 கோடி ... நாளை ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடு நாளை ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் சேதம்: அதிகாரிகள் மீது வழக்கு
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் சேதம்: அதிகாரிகள் மீது வழக்கு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2025
02:07

சென்னபட்டணா; சென்னபட்டணாவின் கூட்லுாரில் உள்ள புராதன ராமர் கோவில் சிதிலம் அடைந்திருப்பது குறித்து, உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.


பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டணா தாலுகாவின், கூட்லுார் கிராமத்தில் நான்காம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீராமர் கோவில் அமைந்துள்ளது. புராண பிரசித்தி பெற்ற கோவில், தற்போது சிதிலம் அடைந்துள்ளது. இதை பராமரிக்க சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதற்கிடையே இம்மாதம் 7ம் தேதியன்று, உப லோக் ஆயுக்தா நீதிபதி நீதிபதி பனீந்திரா, ஏரிகளை ஆய்வு செய்ய சென்னபட்டணாவுக்கு சென்றிருந்தார். அப்போது கூட்லுாரில் புராதன கோவில் சிதிலமடைந்திருப்பதை கவனித்தார். அதிருப்தி அடைந்த அவர், தாமாக முன் வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கொண்டார். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து, நீதிபதி பனீந்திரா கூறியதாவது: ராமர் கோவில் மிகவும் புராதனமானது. கங்கர்கள் சாம்ராஜ்யத்தில் கன்வா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கோவில்களில், இது வும் ஒன்றாகும். கோவிலின் வெளிப்புற கல் கம்பத்தின், வலது புறத்தில் உள்ள சுவர், தடுப்புச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள கற்சுவர் சாய்ந்து வருகிறது. கோவிலின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், பெரிய அசம்பாவிதம் ஏற்படலாம். பு ராதன கோவிலை பாதுகாப்பதில், தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இது கர்நாடக லோக் ஆயுக்தா சட்டப்படி குற்றமாகும். எனவே அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar