திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் சந்நிதியில் வீணையுடன் பரகாலநாயகி திருக்கோலத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பான ஒன்றாகும். இங்கு நாதமுனிகள் சந்நிதியில் உள்ள ஆண்டாளுக்கு ஆடிமாதம் திரு நட்சத்திரமான பூரம் நாள் அன்று ஆடிப்பூரம் திருவிழாவாக, பத்து நாள்கள் நடைபெறுகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் சந்நிதியில் வீணையுடன் பரகாலநாயகி திருக்கோலத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமபத நாதர் சந்நிதியில் மூலவர் பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை), உற்சவர் கள்ளழகர் கோலத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.