Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் பூஜை ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள் ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை : கோவில்களில் திரளாக பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை : கோவில்களில் திரளாக பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
04:07

போடி; ஆடி அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடந்து வருவது வழக்கம். இங்கு உள்ள சிவனை வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் தரிசனம் பெற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


* போடி அருகே அணைக்கரைப்பட்டியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான மரக்காமலை முனீஸ்வரன், லாட சன்னாசிராயர் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடந்து வருகிறது. இங்கு வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் கிடைப்பதாக ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு சன்னாசி ராயர், முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


* போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள், அபிஷேகம் நடந்தது. அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன..


* போடி கொண்டரங்கி மல்லையசாமி கோயில், சுப்ரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar