ஆடி அமாவாசை : கோவில்களில் திரளாக பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
24
ஜூலை 2025 04:07
போடி; ஆடி அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடந்து வருவது வழக்கம். இங்கு உள்ள சிவனை வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் தரிசனம் பெற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. * போடி அருகே அணைக்கரைப்பட்டியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான மரக்காமலை முனீஸ்வரன், லாட சன்னாசிராயர் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடந்து வருகிறது. இங்கு வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் கிடைப்பதாக ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு சன்னாசி ராயர், முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. * போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள், அபிஷேகம் நடந்தது. அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.. * போடி கொண்டரங்கி மல்லையசாமி கோயில், சுப்ரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
|