திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ஆடி பிரம்மோத்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 02:07
கூவம்; திரிபுரசுந்தரி அம்மன் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் இன்று ஆடி பிரம்மோத்சவத்தை ஒட்டி தேரோட்டம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் திரிபுரசுந்தரி அம்மன் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 19ம் தேதி திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்மன், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், 12:45 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது. வரும் 29ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுமென, ஹிந்து சமய அறநிலையினர் தெரிவித்தனர்.