வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 11:07
வில்லியனுார்; வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம்பிடித்து துவக்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று 28ம் தேதி சுவாமிக்கு தீர்த்தவாரி மற்றும் அம்மனுக்கு வளையல் அணியும் நிகழ்ச்சியும், நாளை 29ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.