திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 05:07
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஜூலை 25ல் ஆண்டாள்,பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மாலையில் சூர்ணாபிஷேகம் நடைபெற்றது. இன்று ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை் முன்னிட்டு ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணி அளவில் ஆண்டாள்,பெருமாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 4:50 மணிக்கு தேர்வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது. நாளை பதினொராம் திருநாளை முன்னிட்டு காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள்,பெருமாள் எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.